குமாரபாளையம் அருகே பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையம் அருகே பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு
X

குமாரபாளையம் அருகே வாசுகி நகர் ஊராட்சி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

குமாரபாளையம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே வாசுகி நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து பதவியில் அமர்த்தினார். புதிய தலைவராக ஜீனத், துணை தலைவராக ஸ்ரீதேவி, மேலன்மைக்குழு உறுபினர்களாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துகொன்டனர். பி.டி.ஏ. தலைவர் தம்பி, ஊராட்சி துணை தலைவி நாகவல்லி, ஊராட்சி உறுப்பினர் முனியப்பன், ஆசிரியைகள் கவிதா, அமுதா, புஷ்பலதா, மலர்விழி, தன்னார்வலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business