/* */

பள்ளிபாளையத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

பள்ளிபாளையத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
X

பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு பகுதியில் வசிப்பவர் ஜோஜித்பாரிக், 21. மேற்கு வங்கம் மித்தான்பூரை சேர்ந்தவர். இவர் தனியார் ஆட்டோமேட்டிக் பவர்லூம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் சொந்த ஊரிலிருந்து சம்பா ஜானா, 18, என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு பள்ளிபாளையம் அழைத்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தம்பதியர் இருவரும் தங்கியிருந்த வீடு நேற்று காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்கவில்லை.

பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தந்தனர். நேரில் வந்த போலீசார் கதவை உடைத்து சென்று பார்த்த போது, இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், பெண்ணின் பெற்றோர் இவர்கள் இருக்கும் இடம் அறிந்து, நேரில் வந்து பிரித்து விடுவார்கள் என அஞ்சி, தற்கொலை செய்து கொண்டனர், என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 27 April 2022 1:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  9. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  10. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...