/* */

குமாரபாளையத்தில் டூவீலர் - லாரி மோதல்: கல்லூரி மாணவர்கள் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர், லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் - லாரி மோதல்: கல்லூரி மாணவர்கள் படுகாயம்
X

சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம், 19, ரிஷி, 19. தனியார் கல்லூரி மாணவர்கள். நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணியளவில், திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி ஹோண்டா டியோ பைக்கில் புறப்பட்டுள்ளனர். வண்டியை ஸ்ரீராம் ஓட்ட, ரிஷி பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார்.

சேலம் - கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் எதிர்மேடு பகுதி ஜே.கே.கே. நடராஜா கல்லூரி எதிரில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி, இவர்கள் வந்த டூவீலர் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

உடனடியாக இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனரான, ராசிபுரத்தை சேர்ந்த கண்ணன், 54, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Updated On: 8 May 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  4. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  8. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  9. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைக்கு ஏற்ற பாசிடிவ் மேற்கோள்கள்....!