பொதுமக்கள் புகாரின் பேரிலேயே ஆக்கிரமிப்புகள் அகற்றம் - சேர்மன் தகவல்

பொதுமக்கள் புகாரின் பேரிலேயே ஆக்கிரமிப்புகள் அகற்றம் - சேர்மன் தகவல்
X

விஜய்கண்ணன், சேர்மன், குமாரபாளையம் நகராட்சி.

குமாரபாளையத்தில் பொதுமக்களின் புகாரின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக நகராட்சி சேர்மன் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையத்தில் பொதுமக்களின் புகாரின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக நகராட்சி சேர்மன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சேர்மன் விஜய்கண்ணன் கூறுகையில், குமாரபாளையம் காந்திபுரம், சீரங்க செட்டியார் டேப் பட்டறை வீதி,சரஸ்வதி தியேட்டர் பகுதி, சத்தியாபுரி பகுதி உள்ளிட்ட பல இடங்களில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு, அவைகள் அகற்ற முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறியதால், பொதுமக்கள் புகாரை ஏற்று, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி