குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்கணேசன் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத்தில் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திருச்செங்கோடு, கைத்தறித்துறை உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்கணேசன் பங்கேற்று கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது ஜெயவேல் கணேசன் கூறியதாவது:-
மத்திய அரசு கைத்தறி நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985ன் கீழ் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், சட்டைத்துணி, பிளாங்கெட் சால், உல்லன், ட்வீட் மற்றும் சந்தர் ஆகிய 11 ரகங்களும் விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை அமல்படுத்த நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை ஒருங்கிணைத்து உதவி அமலாக்க அலுவலர் தலைமையில் அமலாக்க பிரிவு அலுவலகம் ரெங்கசாமி பிள்ளை முதல் தெரு, தொண்டிகரடு, திருச்செங்கோடு என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யாமல் இருக்க, தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய ரகங்கள் சட்டத்திற்கு உட்பட்டதா? என உறுதி செய்து கொள்ளுங்கள். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்..
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu