/* */

ஆயுதபூஜை வியாபாரத்தை பாதிக்குமா மழை? குமாரபாளையம் வியாபாரிகள் கவலை

குமாரபாளையம் பகுதியில் பகல் நேரத்தில் பெய்த மழையால், வியாபாரம் மந்தாகி வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

HIGHLIGHTS

நவராத்திரி விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை சாமான் விற்கும் கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

குமாரபாளையம் நகரில் ஆங்காங்கே வாழை மரங்கள் கடைகள், பூக்கடைகள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், பொரி கடைகள், என தற்காலிக கடைகள் அதிகம் அமைக்கபட்டுள்ளன. நவ. 4ல் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி துணிக்கடைகள், நகைக்கடைகள், ஆகியவற்றில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். தங்கள் வசதிக்கேற்ப சாலையோர துணிக்கடைகளில் துணிமணிகள் வாங்கும் நபர்களும் வாங்கி வருகின்றனர். கொரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த வியாபாரம் தற்போதுதான் சற்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில், குமாரபாளையம் பகுதியில், நேற்று மாலை 03:00 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் அனைத்து வியாபாரிகளும் வியாபாரமில்லாமல் தவிப்புக்கு ஆளாகினர். ஒருவேளை மழை இன்றும் தொடருமானால், ஆயுதபூஜை வியாபாரம் பாதிக்கப்படுமோ என்று, வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

Updated On: 13 Oct 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்