பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!

பெருமாள் கோவில்களில்   சிறப்பு வழிபாடு..!

 புரட்டாசி சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோயில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

புரட்டாசி மாதம் சிறப்பானது என்றாலும், இதில் வரும் அனைத்து சனிக்கிழமைகள் மிக அற்புதமானவை. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாவிட்டாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும்.

இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும். அதோடு புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து, பெருமாளை பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு சனியினால் ஏற்படும் தோஷங்கள் மட்டுமின்றி, எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் இருந்தாலும் அது நீங்கி விடும்.

Tags

Next Story
Similar Posts
வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி
வாய்க்காலில் தண்ணீர் திருட்டு; குழாய்களை அகற்றிய அதிகாரிகள்
ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
குமாரபாளையம்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘தூய்மையே சேவை நிகழ்ச்சி’
சாலையை கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயம்..!
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாத்திர வியாபாரி  உயிரிழப்பு!
பெருமாள் கோவில்களில்   சிறப்பு வழிபாடு..!
இந்துக்கள் பகுதியில் மசூதி :  பொதுமக்கள் எதிர்ப்பு..!
குமாரபாளையம் அரசு கல்லூரி மாணாக்கர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை
குமாரபாளையம்; அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அரசு அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது:   225 மது பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையத்தில் உலக ஓசோன் தினம் விழா