/* */

'இன்ஸ்டாநியூஸ்' செய்தி எதிரொலி: பொது சுகாதாரநிலையம் மீண்டும் திறப்பு - மக்கள் நன்றி

‘இன்ஸ்டாநியூஸ்’ செய்தி எதிரொலியாக, பள்ளிப்பாளையம் அருகே, பொது சுகாதார நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு, இன்று 100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

HIGHLIGHTS

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பொது சுகாதாரநிலையம் மீண்டும் திறப்பு - மக்கள் நன்றி
X

பள்ளிபாளையம் அருகே புதுப்பாளையத்தில் மூடப்பட்ட சுகாதார நிலையம்,  ‘இன்ஸ்டாநியூஸ்’ இணையதளச் செய்தியால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போட, இன்று வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் அரசு துணை பொது சுகாதார நிலையம் உள்ளது. இது, நீண்ட மாதங்களாக பூட்டி கிடப்பதாகவும், சாதாரண நோய்க்கு கூட, தொலைதூர நகரப்பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக, பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால், கர்ப்பிணி பெண்கள் பேறுகால பரிசோதனைகள் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். சுகாதார நிலையத்தில் ஊழியர்களை நியமித்து, கொரோனா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பாக, நமது "இன்ஸ்டாநியூஸ்" இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நமது செய்தியின் எதிரொலியாக, மூடிக்கிடந்த புதுபாளையம் பொது சுகாதாரநிலையம் மீண்டும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு இன்று, 100-நபர்களுக்கு கொரோனாவுக்காக கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. மீண்டும் பொதுசுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு ஏற்படுத்தி தருவதாக, 'இன்ஸ்டாநியூஸ்' இணையதளத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Jun 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது