பொதுமக்கள் திரண்ட காளியம்மன் திருவிழா வண்டிவேடிக்கை

குமாரபாளையத்தில் காளியம்மன் திருவிழாவையொட்டி நடைபெற்ற வண்டி வேடிக்கை.
குமாரபாளையத்தில் காளியம்மன் திருவிழாவையொட்டி வண்டி வேடிக்கையை காண சேலம் சாலையில் பொதுமக்கள் திரண்டனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் குண்டம், தேர்த் திருவிழாவையொட்டி நேற்று வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏழுமலையான், கருட வாகனத்தில் பெருமாள், பாற்கடலில் பள்ளிகொண்ட நிலையில் மகாலட்சுமியுடன் பெருமாள், ஆண்டாள், முருகன், சிவன்,பார்வதி, முருகன், விநாயகருடன் சிவலோகம், அஷ்டலட்சுமி அம்மன்கள், தாமரை மலரில் முப்பெரும் தேவியர், தஞ்சை கோவிலுடன் ராஜராஜசோழன் உள்ளிட்ட வேடமிட்டு பக்தர்கள் வலம் வந்தனர்.
இதனைக் காண பாவர் ஹவுஸ் பகுதியில் இருந்து காளியம்மன் கோவில் வரை சுமார் 2 கி.மீ. தூரம் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu