குமாரபாளையத்தில் பகலில் எரியும் மின்விளக்குகளால் பொதுமக்கள் அதிருப்தி

குமாரபாளையத்தில் பகலில் எரியும் மின்விளக்குகளால் பொதுமக்கள் அதிருப்தி
X

குமாரபாளையத்தில் பகலில் எரியும் மின் விளக்கு கண்டு பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். (இடம்: பள்ளிபாளையம் பிரிவு சாலை, குமாரபாளையம்)

குமாரபாளையத்தில் பகலில் எரியும் மின் விளக்கு கண்டு பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

கோடை காலம் மின்வெட்டு வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்து வருகிறோம். காவிரியில் நீர் இல்லாமல் வற்றி உள்ளது. கிழக்கு கரை வாய்க்காலிலும் தண்ணீர் இல்லாமல் குடிநீர் தேவைக்கு கூட பற்றாக்குறையாக இருந்து வருகிறது. மின் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் மின்சாரம் சிக்கனம் தேவை என மின்வாரியம் சார்பில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் அனைத்தும் பகல் 07:00 மணியை தாண்டியும் எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் மின்வாரியத்தினர் இது செய்யலாமா? என பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business