/* */

தொடர் விடுமுறை: பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து செலவிட்ட மக்கள்

தொடர் விடுமுறையால், குமாரபாளையம் அருகே பூங்காவில் நீண்ட நாட்களுக்கு பின்னர். பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

HIGHLIGHTS

தொடர் விடுமுறை: பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து செலவிட்ட மக்கள்
X

பொதுமக்கள் வருகையால், இரவிலும் களைகட்டியுள்ள கத்தேரி பிரிவு பூங்கா. 

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பல நாட்களாக தொடர் மழையானது, பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வந்தது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை இருந்தது. அத்துடன், கொரோனா பரவலாலும், பொதுமக்கள் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தனர். வயனதானவர்கள் மற்றும் குழந்தைகளும் வீட்டில் முடங்கி கிடந்தனர்.

தற்போது மழை இல்லை. அத்துடன், தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் உள்ள சாலையோர பூங்காவில் அதிகளவில் திரண்டனர். வயனதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் பூங்காவில் பொழுதை போக்கினர். குழந்தைகள் சந்தோஷமாக ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தனர். பூங்காவில் திரண்ட கூட்டம் பற்றி தகவல் பரவ, மேலும் அதிகம் பேர் திரண்டனர். இதனால், பூங்கா களை கட்டியது.

Updated On: 27 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...