/* */

குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதல்: விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதல்: விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
X

குமாரபாளையம் அருகே ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (39), ராமலிங்கம் (60) இருவரும் உறவினர்கள். இவர்கள் தங்களது டூவீலரில் சீனிவாசன் பவானி அருகே குல தெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை 5 மணியளவில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி எதிரில் பிரிவு சாலையில், பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதில் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். சீனிவாசன் பலத்த காயங்களுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் பஸ் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...