அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தி

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தி - குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட அமைப்பாளர் சித்ரா கூறியதாவது;
குமாரபாளையம் நகரில் விசைத்தறி. கைத்தறி. சாயத்தொழில், ஸ்பின்னிங், உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதிக அளவிலான கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவை அனைத்திற்கும் மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆனால், குமாரபாளையம் நகரில், நினைத்த போதெல்லாம், மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இது பற்றி கேட்கலாம் என்று மின் வாரிய உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், போர்மன், லைன் மேன் உள்ளிட்ட நபர்களுக்கு போன் செய்தால் யாரும் போன் எடுப்பது கூட இல்லை. ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுத்து, மின் வெட்டு இல்லாத வகையில் செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu