சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் செப்.18ம் தேதி மின் நிறுத்தம்

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் செப்.18ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்.

குமாரபாளையம் சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் வரும் செப்.18ம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி செப்.18 ம் தேதி நடக்கவிருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், கலியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் மற்றும் ஓட்டமெத்தை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture