Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் மார்ச் 5ல் மின் நிறுத்தம்
குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மார்ச் 5ல் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வரும் மார்ச் 5ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மார்ச் 5ல் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
இதனால் குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு,சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.