சமயசங்கிலி துணை மின் நிலைய பகுதிகளில் டிச. 8ல் மின் நிறுத்தம்

சமயசங்கிலி துணை மின் நிலைய பகுதிகளில்  டிச. 8ல் மின் நிறுத்தம்
X

பைல் படம்.

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் டிச. 8ல் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 8ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தமது அறிக்கையில், குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 8ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்று மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture