ஜூலை 10ல் சமயசங்கிலி பகுதியில் மாதாந்திர பராமரிப்பிற்காக மின் நிறுத்தம்

ஜூலை 10ல்  சமயசங்கிலி பகுதியில் மாதாந்திர  பராமரிப்பிற்காக மின் நிறுத்தம்
குமாரபாளையம் அருகே ஜூலை 10ல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள் காரணமாக குமாரபாளையம் அருகே சமய சங்கிலி பகுதியில் ஜூலை 10ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் ஜூலை 10ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story