குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4ம் தேதி) மின் நிறுத்தம்

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (4ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வரும் ௪ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் வரும் 4ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

அதன்படி, குமாரபாளையம் நகரம், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டன்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture