/* */

குமாரபாளையம் அருகே கரும்பு லோடு லாரியில் சிக்கி அறுந்து விழுந்த மின் கம்பிகள்

குமாரபாளையம் அருகே கரும்பு லோடு லாரியில், கரும்புகள் மின் கம்பியில் சிக்கி மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே கரும்பு லோடு லாரியில் சிக்கி அறுந்து விழுந்த மின் கம்பிகள்
X

குமாரபாளையம் கரும்பு லோடு லாரியில், கரும்புகள் மின் கம்பியில் சிக்கி மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை பகுதியில் தேவூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, வெள்ளாளபாளையம், செட்டிபட்டி, அரசிராமணி உள்ளிட்ட பல கிராமங்களில் விளையும் கரும்புகளை பள்ளிபாளையம் அருகே உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல லாரிகள், டிராக்டர்கள் குமாரபாளையம் வழியாக வருவது வழக்கம்.

இதில் மின் கம்பிகள் அறுந்து விடுவது, மின் கம்பங்கள் சாய்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 08:00 மணியளவில் கரும்பு லோடு ஏற்றிய லாரி, காவேரி நகர் பகுதியில் வரும் போது, மின் கம்பிகள் கரும்பில் சிக்கி இழுத்து வந்ததில் பல மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பு வழங்கும் பணியை செய்தனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Updated On: 19 Jun 2022 12:15 PM GMT

Related News