/* */

குமாரபாளையத்தில் குளமாக மாறிய சாலைகள்; மக்கள் கடும் அவதி

குமாரபாளையத்தில் நடைமேடை பணிகளால் சாலைகள் குளமாக மாறியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் குளமாக மாறிய சாலைகள்; மக்கள் கடும் அவதி
X

குமாரபாளையம் சாலைகளில் குளம்போல் காட்சியளிக்கும் மழை நீர்.

குமாரபாளையம் பகுதி சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை வடிகால் அமைப்பு மற்றும் நடைமேடை அமைக்கும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குமாரபாளையம் பகுதிகளில் நேற்று மதியம் 2 மணியளவில் கன மழை பெய்தது. இதனால் சேலம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. சேலம் சாலையில் ஒ.வி.கே. பெட்ரோல் பங்க், பஸ்கள் வெளியில் வரும் பகுதி, ஜே.கே.கே. பங்களா எதிரில், ஆனங்கூர் பிரிவு சாலை, சரவணா தியேட்டர் அருகில் உள்ளிட்ட நடைமேடை அமைத்த பகுதிகளில் மழைநீர் வடிகாலில் செல்வதற்கு வழியின்றி குளம் போல் தேங்கி நின்றது.

இதனால் சாலையில் சென்ற வாகனங்களால் தண்ணீர் தெறிக்க, அருகில் உள்ள வியாபார நிறுவனத்தார்கள், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழை நின்ற பின் தேங்கிய மழைநீர் சேரும் சகதியுமாக மாறி, பெறும் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, மழை நீர் சாலையில் தேங்காமல் தங்குதடையின்றி வடிகாலில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  3. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  4. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  8. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...