குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலம்

குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலம்
X

குமாரபாளையம் நகரில் சந்து பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. 

குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மார்கழி மாதத்தில், ஒவ்வொரு வீதியினரும் தங்கள் பகுதி பொதுமக்கள் நலமுடன் வாழவும், வியாபாரம் செழிக்கவும், பிள்ளைகளின் கல்வி முன்னேறவும், திருமணங்கள் கை கூடவும், தீராத நோய்கள் குணமாகிடவும் வேண்டி, சந்து பொங்கல் எனும் பெயரில் பொங்கல் விழா நடத்துவது வழக்கம்.

அவ்வகையில், தற்போது மார்கழி மாதம் என்பதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை, நிறைய இடங்களில் சந்து பொங்கல் விழாவை உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடினர். காவேரி ஆற்றுக்கு சென்று, மேள தாளங்களுடன் தீர்த்த குடங்கள் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future