/* */

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் உதவி பொறியாளர் கிருஷ்ணன் மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பைகளை வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமைப்படை சார்பில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் நீர் மாசுபடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து மாசுக்கட்டுபாட்டு வாரிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் உதவி பொறியாளர் கிருஷ்ணன் பேசுகையில், காவிரி நீர் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும். அதற்கு காவிரி நீரை மாசு படுத்தக்கூடாது. அவ்வாறு மாசு படுத்துவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர்களாகிய நீங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி ஊழியர்களிடம் வழங்க சொல்ல வேண்டும், நீங்களும் பொது இடங்களில் அசுத்தம் செய்யக்கூடாது. பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தாமல் துணி பைகளை நீங்கள் பயன்படுத்துவதுடன், உங்கள் வீட்டில், நண்பர்கள், உறவினர்களிடமும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பைகளை மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் கிருஷ்ணன் வழங்கினார். தலைமை ஆசிரியர் ஆடலரசு, தேசிய பசுமைப்படை ரகுநாத், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 27 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது