/* */

வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுடன் போலீஸ் டி.எஸ்.பி. ஆலோசனை

குமாரபாளையத்தில் வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் டாஸ்மாக் கண்காணிப்பளர்களுடன் டி.எஸ்.பி. ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுடன்  போலீஸ் டி.எஸ்.பி. ஆலோசனை
X

வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள், டாஸ்மாக் கண்காணிப்பளர்களுடன் போலீஸ் டி.எஸ்.பி. ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

குமாரபாளையத்தில் வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் டாஸ்மாக் கண்காணிப்பளர்களுடன் டி.எஸ்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் டி.எஸ்.பி. இமயவரம்பன் பேசியதாவது:-

லோக்சபா தேர்தலையொட்டி 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் போலீசார் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவார்கள். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால் டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள் இரவு நேரத்தில் கூட டாஸ்மாக் கடைகள் உள்ள வளாகத்தில் தங்கிக்கொள்ள வேண்டும். வங்கிகள், ஏ.டி.எம். மையங்களை வங்கி நிர்வாகத்தினர் இரவு பகலாக தங்கள் பொறுப்பில் ஆட்களை வைத்து கண்காணிக்க வேண்டும். நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை தங்கள் பாதுகாப்பில் பத்திரமாக பாதுகாப்பாக வைத்து, போலீசாருக்கு உதவிட வேண்டும். போலீசார் எப்போதும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உடன் பங்கேற்றார். இதில் பங்கேற்ற அனைவரும் டி.எஸ்.பி. வழிகாட்டுதல்படி செய்கிறோம் என உறுதி கூறினர்.

குமாரபாளையம் பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

ஏப்.19 லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பல கட்ட தேர்தல் முன்னேற்பாடு பணிகள் செய்து வருகின்றனர். போலீசார் சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் தாபா ஓட்டல்களில் மது விற்பனை செய்யவோ, மது குடிக்க அனுமதிக்கவோ கூடாது எனவும், பார்களில் அரசு நிர்ணயம் செய்த நேரம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் எனவும், மற்ற நேரங்களில் மது விற்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 15 April 2024 10:09 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!