/* */

குமாரபாளையம் அரசு கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் அரசு கல்லூரியில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில்,  குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி பேசினார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம், கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. இதில் குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி பங்கேற்று விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார்.

அவர் பேசியதாவது: மாணவியர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மிரட்டல் விடுக்கும் நபர்களிடம் எதிர்த்து நில்லுங்கள். சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரியப்படுத்துங்கள். குறிப்பிட்ட எண்களை வைத்துக்கொண்டு போன் மூலம் தகவல் தெரிவித்தால் 24 மணி நேரமும் போலீசார் உங்களுக்கு உதவ தயாராக உள்ளனர். பைக், கார், உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வந்து பேசும் டிப்டாப் அசாமிகளிடம் அவர்களை நம்பி பேசி, ஏமாந்து விடாதீர்கள் என்றார்.

பேராசிரியர்கள் ரகுபதி, ரமேஸ்குமார், கீர்த்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 May 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!