குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மரக்கன்றுகள் நடவு

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மரக்கன்றுகள் நடவு
X

 குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்திபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில், வார்டு ஒன்றுக்கு தலா 50 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது. மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல்படி வார்டு செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக நகர செயலர்கள் சரவணன், சித்ரா பங்கேற்று காந்திப்புரம் பகுதியில் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று நடைபெறுவதையொட்டி வார்டில் உள்ள பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள சொல்லி வீடு, வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு முக கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. 22வது வார்டு செயலர் ரேவதி, 12வது உஷா, வரதராஜன், விஜயகுமார்,ராம்கி உள்பட பலர் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டு அவைகள் ஆடு, மாடு, மற்றும் நாய்களால் சேதப்படுத்தப்படாமல் இருக்க வேலியும் அமைக்கப்பட்டது.

Tags

Next Story