Begin typing your search above and press return to search.
அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி குமாரபாளையத்தில் 550 பனை விதை நடும் விழா
குமாரபாளையத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி 550 பனை விதை, நடும் விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் மற்றும் இயற்கை பெருக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி 550 பனை விதைகள் நடும் விழா சடையம்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில் அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
சின்னப்ப நாயக்கன்பாளையம் நகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அப்துல்கலாம் குறித்த பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசாகப் புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுவாமிநாதன், பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.