பள்ளிபாளையம் அருகே பெருந்துறை இளைஞர் கழுத்தை அறுத்து கொலை

பள்ளிபாளையம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட இடத்தில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் உள்ளிட்ட போலீசார் நேரில் விசாரணை செய்தனர்.
பள்ளிபாளையத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே பயணியர் மாளிகைக்கு பின்புறம் இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனி பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை பின்புறம் பாலக்காடு என்ற பகுதியில் ஒரு இளைஞர் ரத்த வெள்ளத்தில் கொலையான நிலையில் இருப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்பொழுது சென்னை-கோவை செல்லும் ரயில்வே இரும்பு பாலம் அருகில், பயணியர் மாளிகை பின்புறப்பகுதியில், ஒரு இளைஞர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தது கண்டு, பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டதில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ரயில்வே இரும்பு பால பகுதியில் ரத்த கரைகள் இருந்ததும், அந்த இடத்தில் இருந்து உடலை இழுத்து வந்து தற்போது சடலம் இருந்த பகுதியில் வீசப்பட்டிருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்தில் கொலைக்கான காரணம் குறித்து தகவல்கள் கிடைக்குமா என திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கொலையான இளைஞர் உடலை சோதனை செய்த பொழுது அவரது சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையின் அடிப்படையில், உயிரிழந்தவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து, தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu