Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி
குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தீவிர தூய்மைப் பணிகள் விழிப்புணர்வு திட்டம் சார்பில் குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் பேரணி நடைபெற்றது. தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் அன்பு கல்லூரி மாணவ, மாணவியர், தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.