/* */

பட்டா இடத்தில் பூங்கா அமைப்பு: இடத்தை மீட்டுத்தர உரிமையாளர் கோரிக்கை

குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில்பூங்கா அமைக்கப்பட்டதால், இடத்தை தரக்கோரி உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை.

HIGHLIGHTS

பட்டா இடத்தில் பூங்கா அமைப்பு: இடத்தை மீட்டுத்தர உரிமையாளர் கோரிக்கை
X

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் அமைத்த பூங்கா இடம் தனியாருக்கு சொந்தமானதால் அதனை அளவிடும் பணி துவங்கியது.

குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டதால், பூங்கா அமைத்த பட்டா இடத்தை தரக்கோரி இட உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சில ஆண்டுகள் முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த இடம் தன்னுடையது என காவல்துறையில் பணியாற்றும் நபர் ஒருவர் உரிய ஆவணங்களுடன் வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன் படி பூங்கா அளவிடும் பணி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து, வி.ஏ.ஒ. தியாகராஜன் முன்னிலையில் துவங்கியது.

இது பற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது:- இந்த இடத்தின் உரிமையாளர் பல வருடங்களாக வெளியூரில் இருந்ததால், இந்த இடம் குறித்து அவரால் அறிய முடியவில்லை. பல வருடங்களாக இடம் யாரும் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், அரசு நிலம் என்று எண்ணி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த இடத்தை தனக்கு கொடுக்க சொல்லி ஊராட்சி நிர்வாகத்திற்கு இடத்தின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பூங்கா அமைக்க செலவான சுமார் 25 லட்சம் ரூபாயை அரசு வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் செய்வதறியாது இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 6 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!