பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டத்தில் கேள்விகளால் திணற வைத்த பெற்றோர்

பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டத்தில்  கேள்விகளால் திணற வைத்த பெற்றோர்
X

குமாரபாளையம் மகளிர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற மேலாண்மைகுழு கூட்டத்தில் பெற்றோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அரசு பள்ளிகளில் நடந்த பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டத்தில் மகளிர் மேனிலைப்பள்ளியில் கேள்விகளால் பெற்றோர் திணற வைத்தனர்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் மறு கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சிவகாமி தலைமையில் மாணவிகளின் பெற்றோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய மாணவிகளின் பெற்றோர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி செல்லும் குறுகலான சாலையில் இரு பள்ளிகளும் மாலை 04:30 மணிக்கு விடப்படுகின்றன. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு மாணவ, மாணவியர், பொதுமக்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மாணவர்கள் மாணவிகளை கிண்டல் செய்யும் நிலையம் ஏற்படுகிறது. 15 நிமிடம் முன்னதாக விட்டால் மாணவியர் பாதுகாப்பாக செல்ல உதவியாக இருக்கும். அதே போல் மகளிர் பள்ளி கழிப்பிடம் இருக்கும் இடத்தில் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்கும் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என அவர்கள் கூறினர்.

நகரில் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை அரசு உயர்நிலை, மற்றும் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் இந்த கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story