/* */

குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில்  பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்   கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் நூதன ஸ்ரீபஞ்சமுக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில்,  சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்தனர். 

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில், நூதன ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக சம்ப்ரோக்ஷன விழா, கணபதி பூஜையுடன் துவங்கியது. டிச. 20 காலை 05:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், காலை 11:00 மணிக்கு, காவேரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்று மாலை, 05:30 மணிக்கு வாஸ்து சாந்தி, மாலை 07:30 மணிக்கு, முதல்கால யாகசாலை பூஜை, டிச. 21 காலை 09:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 10:00 மணிக்கு கோபுர கலச பிரதிஷ்டை, மாலை 05:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.


நேற்று காலை 06:30 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை, யாகசாலையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மேல், மகா கும்பாபிஷேக விழா, 10:30 மணிக்கு மேல் ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 04:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவை கணக்கம்பாளையம் பிரபு சிவம், ஆலய அர்ச்சகர் சந்தோஷ்சிவம் மற்றும் குழுவினர் நடத்தினர். கோவில் வளாகத்தில், கூடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார் அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 22 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் நேரு
  2. நாமக்கல்
    சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரிக்கை
  3. கோவை மாநகர்
    கோவை அருகே காட்டு யானை விரட்டியதில் காவலாளி உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்பத்து சுமைதாங்கியே அப்பா, உங்களை வணங்குகிறேன்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குறும்புகள் செய்யும் என் செல்ல மகளுக்கு அன்பான பிறந்த நாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் உடன்பிறந்த அன்பு சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  7. சினிமா
    பாட்ட சுட்டுட்டாய்ங்கய்யா..! எகிறிய இளையராஜா..! நடந்தது என்ன? முழுசா...
  8. ஈரோடு
    நம்பியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு
  9. நாமக்கல்
    மோகனூர் ரயில்வே பாலத்தின் அடியில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் இனி தினசரி குடிநீர் வினியோகம்: மாநகராட்சி அறிவிப்பு