/* */

முன்கூட்டிய போனஸ் வழங்க பள்ளிபாளையத்தில் விசைத்தறியாளர்கள் கோரிக்கை

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட கூட்டத்தில், முன்கூட்டியே போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

HIGHLIGHTS

முன்கூட்டிய போனஸ் வழங்க பள்ளிபாளையத்தில் விசைத்தறியாளர்கள் கோரிக்கை
X

பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சங்க அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. 

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட குழு கூட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சங்க அலுவலகத்தில் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட செயலாளர் அசோகன், சங்க மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் விசைத்தறி மற்றும் அதன் சார்ந்த துறைகளில் சுமார் ஒன்றைரை லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலத்தில் போனஸ் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 11,11,2020 அன்று பள்ளிபாளையம் பகுதி உரிமையாளர்கள் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு)வோடு 9/50% (சதம்) வழங்குவதாக ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தபடி இந்தாண்டு தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே வழங்க வேண்டும்,

மாவட்டம் முழுவதும் உள்ள ஆண் -பெண் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்தாண்டை விட கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சுமார் 150% உயர்ந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75% கூலி உயர்வு விசைத்தறி நிர்வாகங்கங்கள் வழங்க வேண்டும்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை தொழிலாளர் துறையும், மாவட்ட ஆட்சி நிர்வகமும், தமிழக அரசும், தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 15.3.2019 அன்று போடப்பட்ட 10% (சதம்) கூலி உயர்வு இரண்டாண்டுக்கு வழங்குவது என ஒப்பந்தம் ஆனது. அந்த ஒப்பந்தம் 15/3/2021 அன்றோடு முடிவடைந்துவிட்டது எனவே பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்கி புதிய கூலி உயர்வு வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 15 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது