/* */

விபத்து ஏற்படுத்தும் பள்ளிப்பாளையம் சாலை... சீரமைக்காததால் மக்கள் கவலை

விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளிப்பாளையம் அக்ரகாரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், குமாரபாளையம் செல்லும் அக்ரகாரம் சாலையில் உள்ளது. இங்கு பஸ் நிறுத்துமிடத்தில், உள்ள பக்கவாட்டு சாலையானது குண்டும் குழியுமாக உள்ளது.
மோசமான சாலையால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அவ்வப்போது பெய்யும் மழையினால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி, இரவில் வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பதை அறியாமல், அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே, பழுதடைந்து பள்ளமாக உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைத்து, விபத்து அபாயம் இல்லாத சூழலை உருவாக்கித் தருமாறு, பள்ளிபாளையம் நகராட்சிக்கும் நெடுஞ்சாலை துறைக்கும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 May 2021 2:22 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?