/* */

அதிகரிக்கும் கொரோனா தொற்று! பள்ளிபாளையம் முக்கிய வீதிகள் அடைப்பு

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பள்ளிபாளையத்தில் முக்கிய வீதிகள் அடைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நேற்று ஒரே வீதியில் இரண்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் அங்கு உள்ள நபர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மருத்துவக்குழுவினர் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் வெளியாட்கள் யாரும் அந்தப் பகுதியில் செல்லாதவாறு, நேற்று மாலை பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜவீதி, ஆவாரங்காடு சாலையில் உள்ள சுபாஷ் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகளில், மக்கள் நடந்து செல்லக்கூடிய வகையில் இடைவெளியுடன், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள மக்களிடம் அங்கு குடியிருப்போரின் விபரத்தை மருத்துவக்குழுவினர் சேகரித்து வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில், நேற்று ஏராளமான நபர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதால் பள்ளிபாளையம் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Updated On: 12 May 2021 12:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க