/* */

பள்ளிபாளையம் நகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கல்

பள்ளிபாளையம் நகராட்சி முன்களப்பணியாளர்களுக்கு, சளி, காய்ச்சல், உள்ளிட்ட பரிசோதனை செய்வது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளிபாளையம் நகராட்சி பகுதியிலும் அத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக, பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று, நகராட்சியில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு, வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் மேற்கொள்ள வேண்டிய சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பரிசோதனைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், பொதுமக்களிடம் எப்படி பரிசோதனை மேற்கொள்வது, பல்ஸ் மீட்டர் பார்ப்பது, வெளியூர் நபர்களை எவ்வாறு கணக்கெடுப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன் மற்றும் சுகாதார அதிகாரி நகுல்சாமி ஆகியோர் வழங்கினர்.

Updated On: 9 Jun 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!