/* */

பள்ளிபாளையத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு - அதிகாரிகள் ஆய்வு

பள்ளிபாளையத்தில், உழவர் சந்தை அமையவுள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு - அதிகாரிகள் ஆய்வு
X

பள்ளிபாளையத்தில், உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் பகுதியில், உழவர்சந்தை இதுவரையிலும் அமைக்கபடவில்லை. இந்நிலையில் பள்ளிபாளையம் சுற்றுவட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில், பள்ளிபாளையம் ஆவரங்காடு , மற்றும் புதன் சந்தை பகுதியில், உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வுப்பணியை, நாமக்கல் வேளாண்துறை அதிகாரிகள், பள்ளிபாளையம் வேளாண் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர். உழவர் சந்தை அமைக்கப்பட்டால் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர் சந்தை அமைக்கும் பணிகள் துரிதமாக தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 24 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு