குற்றவாளிகளை பிடிப்பதில் வேகம்: பள்ளிபாளையம் ஆய்வாளருக்கு பாராட்டு

பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் கே சந்திரகுமாரை, மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் பாராட்டினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஐபிஎஸ் உத்தரவின்படி, காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர்.
இதில் சிறப்பாக பணியாற்றியதற்காக, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் கே சந்திரகுமாருக்கு, மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் பாராட்டினார். அத்துடன், சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்வின் போது, சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu