/* */

பள்ளிபாளையம்: கள்ளத்துப்பாக்கி, மதுபாட்டில் வைத்திருந்த இருவர் கைது

பள்ளிபாளையத்தில், 51 மதுபாட்டில்கள் மற்றும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்: கள்ளத்துப்பாக்கி, மதுபாட்டில் வைத்திருந்த இருவர் கைது
X

கடத்தப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் இன்று, பள்ளிபாளையம் கொக்கராயன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, கொக்கராயன்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்த சக்திவேல்-34, அவரது வீட்டு முன்பு கையில் துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் கோடீஸ்வரன்-33, என்பவர் கையில் மதுபாட்டிலுடன் இருந்தார். போலீசாரை கண்டதும், இருவரும் தப்ப முயன்றனர்.

சுற்றி வளைத்து அவர்கள் இருவரை பிடித்து விசாரித்ததில், ஊரடங்கில் மதுபான பாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும், அத்துடன், துப்பாக்கி உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், துப்பாக்கி, ஏர்கன் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்கள் கைப்பற்றினர்.

Updated On: 17 Jun 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்