/* */

குமாரபாளையத்தில் இருசக்கர வாகன விபத்து: ஒருவர் பலி

சேலம் கோவை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இருசக்கர வாகன விபத்து: ஒருவர் பலி
X

குமாரபாளையம் காவல் நிலையம். (பைல் படம்)

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அன்பழகன், 34. கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தனது டி.வி.எஸ். போனெக்ஸ் டூவீலரில் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டுனர் எவ்வித சைகையும் காட்டாமல் திடீரென்று பிரேக் போட்டதால் அன்பழகன் டூவீலர் அந்த டூவீலர் மீது மோதியது. இதில் அன்பழகனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அன்பழகன் உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், முன்னாள் சென்ற நபர் குமாரபாளையம் அருகே வளையக்காரனூரை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளி கந்தசாமி, 44, என்பது தெரிய வந்தது. கந்தசாமியை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...