/* */

குமாரபாளையத்தில் அடிதடி வழக்கில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட அடிதடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அடிதடி வழக்கில் ஒருவர் கைது
X

மாதிரி படம்.

குமாரபாளையம், சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தமிழ்மணி,36, பிரபு, 35. கூலித்தொழிலாளர்கள். இருவருக்குமிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகறாரறு அடிக்கடி ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. ராஜம் தியேட்டர் அருகே உள்ள டீக்கடை முன்பு நேற்று மாலை 4 மணியளவில் இருவருக்கும் வாய்த்தகராறில் ஆரம்பித்து, முடிவில் அடிதடியில் நிறைவு பெற்றது. இதுகுறித்து பிரபு குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, தமிழ்மணி மீது வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

Updated On: 5 Aug 2021 4:30 PM GMT

Related News