ஆடி வெள்ளியையொட்டி பலகார அலங்காரத்தில் அருள்பாலித்த காளியம்மன்

ஆடி வெள்ளியையொட்டி பலகார அலங்காரத்தில் அருள்பாலித்த காளியம்மன்
X

ஆடி வெள்ளியையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் பலகார சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

ஆடி வெள்ளியையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

ஆடி வெள்ளியையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பலகார அலங்காரத்தில் காளியம்மன் அருள்பாலித்தார்.

இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?