குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில்   இலவச கண்சிகிச்சை முகாம்
X

குமாரபாளையம் அருகே கத்தேரி ஊராட்சியில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கத்தேரி ஊராட்சியில் தளபதி லயன்ஸ் சங்கத்தார் சார்பில் சங்க தலைவர் தனபால் தலைமையில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. ஈரோடு அரசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் சிகிச்சை குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் பங்கேற்ற 120 பயனாளிகளில் 68 பேர் ஐ.ஓ.எல். பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். கத்தேரி ஊராட்சி தலைவி தமிழ்செல்வி, துணை தலைவி கவிதா, சங்க நிர்வாகிகள் பிரபு, விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதே போல் குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. கண்ணில் புரை உண்டாகுதல், மாறு கண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், நீர் வடிதல், கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு 68 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். மாத்திரைகள், ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

ரத்ததான முகாமில் 92 பேர் ரத்ததானம் செய்தனர். ஈரோடு சுப்ரீம் ரத்த வங்கி அரசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் சேவையில் பங்கேற்றனர்.சங்க தலைவர் மாதேஸ்வரன், கோகுல்நாத், சுந்தரராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு நாளில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டய தலைவர் ஜெகதீஷ், தலைவர் மாதேஸ்வரன், செயலர் கோகுல்நாத், பொருளர் தர்மலிங்கம், முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பரிசாக புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கினர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!