/* */

குமாரபாளையம் இறைச்சிக்கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள் ஆய்வு

குமாரபாளையத்தில் உள்ள மீன் இறைச்சி கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள், இன்று திடீர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் இறைச்சிக்கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள் ஆய்வு
X

 குமாரபாளையம் பகுதியில், மீன் இறைச்சி கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மீன் இறைச்சி கடைகளில், உணவுப்பொருள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் பகுதியில் உள்ள மீன் இறைச்சி கடைகளில், பழைய இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில், குமாரபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, அருண் கூறியதாவது: குமாரபாளையம் மீன் இறைச்சிக்கடைகளில், பழைய இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீன் இறைச்சி 7 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதே இடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், பழைய மீன் இறைச்சி 7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டன. 3 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இறந்த உடல் கெட்டுபோகாமல் இருக்க பயன்படுத்தப்படும் பார்மலின் ரசாயனம் மீன்களில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விதிமீறி செயல்பட்ட மற்றும் உரிமம் பெறாமல் மீன் விற்பனை செய்த 5 கடையினருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றார்.

இந்த ஆய்வின் போது, மீன்வளத்துறை அதிகாரிகள் வேலுசாமி, தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 3 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்