/* */

'ஊரடங்கு இல்லை, வாங்கடா கிரிக்கெட் விளையாடுவோம்'

ஞாயிறு அன்று ஊரடங்கு இல்லாததால் இளைஞர்கள் ஜாலியாக கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

ஊரடங்கு இல்லை, வாங்கடா கிரிக்கெட் விளையாடுவோம்
X
ஊரடங்கு இல்லாததால் ஞாயிறு அன்று கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் விளையாட்டு மைதானங்களில் இளைஞர்கள் விளையாடப் போகாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். இந்நிலையில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்றும், இன்றும் நடைமுறையில் இருந்த ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு விலக்கிக்கொண்டது. அதனால் வழக்கமான இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை மக்கள் வாங்க கடைகளில் குவிந்தனர்.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் பொழுது போக்கிற்காகவும் விளையாட்டு திடல்களில் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடியதை நம்மால் காண முடிந்தது. அதேநேரத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு என்பதால் அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமை விளையாட முடியாது என வருத்தம் தெரிவித்தனர்.

Updated On: 9 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...