தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

தி.மு.க. சார்பில் நீர் மோர்
பந்தல் திறப்பு
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர்
பந்தல் திறக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் தெற்கு தி.மு.க. சார்பில் நீர் மோர்
பந்தல் திறப்பு விழா நடந்தது. தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் காலனி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பள்ளிபாளையம் நகர தி.மு.க. செயலாளர் குமார் பங்கேற்று திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, அன்னாசி, முலாம்பழ ஜூஸ், நீர்மோர் ஆகியன வழங்கப்பட்டன. மாவட்ட மாணவரணி நிர்வாகி தங்கமணி, நகர இளைஞரணி அமைப்பாளர் .வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் தெற்கு தி.மு.க. சார்பில் நீர் மோர்
பந்தல் திறப்பு விழா நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu