/* */

குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களின் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களின் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது.

விடியல் பிரகாஷ், சேவற்கொடியோர் பேரவை நிர்வாகி பாண்டியன், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தனர். என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்று, தண்ணீரின் அவசியம் குறித்தும், வரும்காலங்களில் நீரின் தேவை மற்றும் பற்றாக்குறை ஆகியவை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும், பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் சென்றனர்.

பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, பெராந்தர் காடு, காந்திபுரம், சேலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ், ஆசிரியர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது