குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவிலில் நவராத்திரி வழிபாடு சிறப்பு யாகம்

குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவிலில் நவராத்திரி வழிபாடு   சிறப்பு யாகம்
X

குமாரபாளையம் நேதாஜி நகர் சந்தோஷி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை நாளையொட்டி வட மாநில கொலுவுடன், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.

குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.

நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. நேதாஜி நகர் சந்தோஷிஅம்மன் கோவிலில் வட மாநில முறையில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, சரஸ்வதி பூஜை நாளையொட்டி சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture