களை கட்டிய நவராத்திரி: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

களை கட்டிய நவராத்திரி: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம்,  சேலம் சாலையில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் அம்மன்,  புவனேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில்சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நவராத்திரி விழாவையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் குமாரபாளையம் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

Tags

Next Story
the future of ai in healthcare