Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை
குமாரபாளையத்தில் காவிரி கரையோரப்பகுதியில் மக்களை பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
HIGHLIGHTS
காவிரியில் அதிக வெள்ளம் வந்ததால் பொதுமக்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர். மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த ஆர்.டி.ஒ. இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.
தாசில்தார் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன், செந்தில்குமார், மற்றும் பலர் உடனிருந்தனர்.