கனமழையிலும் கோம்பு பள்ளம் அடைப்பை அகற்றிய நகராட்சி பணியாளர்கள்

கனமழையிலும் கோம்பு பள்ளம் அடைப்பை அகற்றிய நகராட்சி பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் கனமழையிலும் கோம்பு பள்ளம் அடைப்பை அகற்றினர்.

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் கனமழையிலும் கோம்பு பள்ளம் அடைப்பை அகற்றினர்.

குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, கோம்பு பள்ளம் குறுக்கே தரைமட்ட பாலம் உள்ளது. மழை வந்தால் மழை நீர் அடித்து கொண்டு வரும் செடி, கொடிகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை இந்த தரைமட்ட பாலத்தில் கீழ் பகுதியில் சிக்கி, தண்ணீர் போகமுடியாத நிலை ஏற்படும். இதனால் மழை நீர் பாலத்தின் மேலே செல்லும். இந்நிலையில் இன்று பெய்த கனமழையால் இப்பகுதியில் தேங்கிய மழைநீரை பொக்லின் கொண்டு குப்பைகள் நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதே போல் பல இடங்களில் அடைப்புகளை அகற்றி தண்ணீர் எளிதில் செல்ல வழி செய்யப்பட்டது.


Tags

Next Story
application of ai in agriculture